என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலி
Byமாலை மலர்19 Jan 2021 7:38 AM GMT (Updated: 19 Jan 2021 7:38 AM GMT)
நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா கூத்தாடும் குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நேற்று மாலை உறவினர் மகன் முருகனுடன் சேர்ந்து புத்துக்கோவிலை நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
ஜீவாநகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அந்த வழியாக கிருஷ்ணகிரியில் இருந்து சென்னையை நோக்கி சென்ற ஒரு கார் திடீரென அவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. அதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை, அப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X