search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    வடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பைவிட கூடுதலாகவே மழை பதிவாகி உள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவ மழை நீடித்த கடந்த 1-ந் தேதியில் இருந்து கடந்த 18-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதலாகவே மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் இயல்பு மழை 19.8 மில்லி மீட்டர், ஆனால் பெய்தது 194.4 மில்லி மீட்டராகும். அதேபோல் காஞ்சீபுரத்தில் இயல்பு மழை 11.7, பெய்தது 100.7. செங்கல்பட்டு இயல்பு 14.2, பெய்தது 164.3., திருவள்ளூர் இயல்பு 15.7, பெய்தது 127.5. மதுரை இயல்பு 9.4, ஆனால் பெய்தது 131.2, திருச்சி இயல்பு 10, பெய்தது 137.1. கோவை இயல்பு 7.6, பெய்தது 96.9. நெல்லை இயல்பு 31.4, பெய்தது 374.3.

    இவ்வாறு அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×