என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே அனுமதியின்றி மதுவிற்ற 6 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2021 6:21 PM GMT (Updated: 18 Jan 2021 6:21 PM GMT)
திருப்பூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்
வீரபாண்டி:
திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார், இடுவம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருப்பூர் இடுவம்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்த சண்முகம் (வயது 44) என்பவர் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்தனர்.
இதேபோல் சுண்டமேடுபகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் (21) என்பவரிடம் 7 மது பாட்டில்களும், பலவஞ்சிபாளையம் பகுதியைச்சேர்ந்த மூர்த்தி (39) என்பவரிடமும் 13 மதுபாட்டில்களையும், முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (27) என்பவரிடமிருந்து 10 மதுபாட்டில்களையும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (31), அன்பரசன் (32) என்பவரிடமிருந்து 12 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார், இடுவம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருப்பூர் இடுவம்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்த சண்முகம் (வயது 44) என்பவர் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்தனர்.
இதேபோல் சுண்டமேடுபகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் (21) என்பவரிடம் 7 மது பாட்டில்களும், பலவஞ்சிபாளையம் பகுதியைச்சேர்ந்த மூர்த்தி (39) என்பவரிடமும் 13 மதுபாட்டில்களையும், முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (27) என்பவரிடமிருந்து 10 மதுபாட்டில்களையும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (31), அன்பரசன் (32) என்பவரிடமிருந்து 12 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X