என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்டுப்புத்தூரில் வக்கீலை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2021 2:54 PM GMT (Updated: 18 Jan 2021 2:54 PM GMT)
காட்டுப்புத்தூரில் வக்கீலை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுப்புத்தூர்:
காட்டுப்புத்தூர் தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் அருணகிரி(வயது 38). வக்கீலான இவர், சம்பவத்தன்று காட்டுப்புத்தூர் கீழ மஞ்சமேடு பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் பொங்கல் விழாவிற்காக ஒலிபெருக்கியை சத்தமாக வைத்துள்ளனர்.
உடனே அவர், ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதன்காரணமாக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த பசுபதி(19), சின்னமருது(20) ஆகியோர் அருணகிரியை தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதி, சின்னமருது ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X