search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

    திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டியை சேர்ந்த பன்னாரி என்பவரின் மகன் சிவராஜ் (வயது 20) . இவர் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மதியம் வேலை முடிந்த உடன் சிவராஜ் மோட்டார்சைக்கிளில் கணியாம்பூண்டி வஞ்சிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் பாதி வழியிலேயே சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×