search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    அமைந்தகரையில் பெண்ணின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை- போதை வாலிபர் வெறிச்செயல்

    அமைந்தகரையில் வீடு புகுந்து பெண்ணின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்த போதை வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை அமைந்தகரை முத்து இருளாண்டி காலனியில் கணவரை இழந்த பெண் ஒருவர் 2 மகன்களுடன் வசித்து வந்தார். அவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகன்களின் பராமரிப்பில் பெண் வசித்து வந்தார். 47 வயதான அவர் மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தனியாகவே இருப்பார்.

    இந்த நிலையில் அவரது 2 மகன்களும் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் விதவை பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
    இதனை எதிர் வீட்டைச் சேர்ந்த இருதயராஜ் என்ற வாலிபர் நோட்டமிட்டார். இந்த நிலையில் இரவு 7.30 மணியளவில் திடீரென மது போதையில் தனியாக இருந்த பெண் வீட்டுக்குள் இருதயராஜ் அத்துமீறி புகுந்தார்.

    பெண்ணை கட்டிபிடித்து அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவரது பிடியில் இருந்து விடுபட்ட பெண் அலறியடித்து கொண்டு வெளியில் ஓடினார். இருப்பினும் விரட்டி பிடித்த இருதயராஜ் பெண்ணை மடக்கி பிடித்து வீட்டுக்குள் வைத்தே மீண்டும் கன்னத்தை கடித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறி கூச்சல் போட்டார். இதையடுத்து பயந்து போன இருதயராஜ் வீட்டை விட்டு வெளியில் ஓடினார். பின்னர் வீடு திரும்பிய மகன்களிடம் நடந்த சம்பவத்தை கூறி பெண் கதறி அழுதார். பின்னர் அவர்களது உதவியுடன் சூளைமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போதையில் வாலிபர் இருதயராஜ் கடித்ததில் பெண்ணின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வீங்கியது. இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் போதை வாலிபர் இருதயராஜ் வெறித்தனமாக நடந்து கொண்டதும் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததும் அமைந்தகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய இருதயராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×