search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    திருப்பூரில் 20-ந்தேதி மின்தடை

    திருப்பூர் துணை மின்நிலையத்தில் வருகிற 20-ந்தேதி மின்கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் கே.டி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் கலெக்ட்ரேட் துணை மின்நிலையத்தில் வருகிற 20-ந்தேதி மின்கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை கலெக்ட்ரேட் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபம்,மன்னாங்காடு,பல்லடம் மெயின்ரோடு,தமிழ்நாடு தியேட்டர் பின்புறம்,வி.ஏ.ஓ ஆபிஸ்ரோடு,பூம்புகார் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×