search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    எடப்பாடி அருகே மக்கள் கிராம சபை கூட்டம்- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நாளை நடைபெற உள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்களுடைய குறைகளை நேரடியாக கேட்டறிந்து பேசி வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி மகா முனியப்பன் கோவில் எதிரில் உள்ள திடலில் நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக அவர் தருமபுரி வழியாக காரில் சேலம் வருகிறார். அவருக்கு தி.மு.க.வினர் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கின்றனர். இதை தொடர்ந்து சேலத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் அவர் மாலையில் எடப்பாடி செல்கிறார்.
    Next Story
    ×