என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்17 Jan 2021 6:54 AM GMT (Updated: 17 Jan 2021 6:54 AM GMT)
சுரண்டை அருகே ஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த கீழச்சுரண்டை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெபமணி பாலச்சந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு அம்சுமணி (வயது60) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். அவருடைய நகைகள் ஜெபமணி வீட்டில் இருந்தது.
நேற்று கீழச்சுரண்டையில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்திற்கு கணவன்-மனைவி இருவரும் சென்றுள்ளனர்.
கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவுகள் திறந்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க செயின், கம்மல்கள் திருட்டு போய் இருந்தது.
உடனடியாக சுரண்டை போலீசில் ஜெபமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக அதே தெருவில் வசிக்கும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டு போன 20 பவுன் செயின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த கீழச்சுரண்டை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெபமணி பாலச்சந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு அம்சுமணி (வயது60) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். அவருடைய நகைகள் ஜெபமணி வீட்டில் இருந்தது.
நேற்று கீழச்சுரண்டையில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்திற்கு கணவன்-மனைவி இருவரும் சென்றுள்ளனர்.
கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவுகள் திறந்திருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க செயின், கம்மல்கள் திருட்டு போய் இருந்தது.
உடனடியாக சுரண்டை போலீசில் ஜெபமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக அதே தெருவில் வசிக்கும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டு போன 20 பவுன் செயின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X