என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டவாளத்தில் தலை வைத்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்17 Jan 2021 6:52 AM GMT (Updated: 17 Jan 2021 6:52 AM GMT)
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம், குண்டாறு 6 கண் பாலம் அருகில் உள்ள தண்டவாளத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க நபர் ரெயில் மோதி பிணமாக கிடந்தார். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததில் செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த ரெயில் மோதி அவரது தலை துண்டானது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. பச்சை கலர் பெல்ட்டும், கறுப்பு சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார்.
விருதுநகரில் இருந்து திருமங்கலத்துக்கு பஸ்சில் பயணம் செய்ததற்கான டிக்கெட் அவரது பையில் இருந்தது. தலைபாகை அணிந்திருந்தார். அவர் விவசாயியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X