என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத்
Byமாலை மலர்17 Jan 2021 6:04 AM GMT (Updated: 17 Jan 2021 6:04 AM GMT)
பட்டா கத்தியால் கேக் வெட்டிய விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இந்துமக்கள் கட்சி சார்பில் பொங்கல்விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
உதயநிதிஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் தி.மு.கவின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேசாமல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. வருகிற 19-ந்தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் காஷ்மீர் தினம் கடைபிடிக்க இருக்கிறோம்.
நடிகர் விஜய்சேதுபதி தனது பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தாலும் அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் கோவில் சிலை வைக்க சிலர் வேண்டுமென்றே தடை செய்து வருகின்றனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல்லில் இந்துமக்கள் கட்சி சார்பில் பொங்கல்விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
உதயநிதிஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் தி.மு.கவின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேசாமல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. வருகிற 19-ந்தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் காஷ்மீர் தினம் கடைபிடிக்க இருக்கிறோம்.
ஜன 24-ந்தேதி மொழிப்போர் தினம் என்ற பெயரில் திராவிட இயக்கங்கள் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை மறுத்து வருகிறது. அதேநாளில் இந்து மக்கள் கட்சி சார்பில் மும்மொழி கல்வி திட்டம், நவோதயா பள்ளிகள் தேவை என வலியுறுத்தி தபால்கார்டு அனுப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X