என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்16 Jan 2021 8:34 PM GMT (Updated: 16 Jan 2021 8:34 PM GMT)
திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள பூவலை கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 27). வேன் டிரைவர்.
இவருக்கும், மீஞ்சூரை அடுத்த காட்டூரை சேர்ந்த சுவிதா (24) என்பவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தற்போது சுவிதா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை பூவலை கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த சுவிதா, வேட்டியால் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுவிதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் சுவிதாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள பூவலை கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 27). வேன் டிரைவர்.
இவருக்கும், மீஞ்சூரை அடுத்த காட்டூரை சேர்ந்த சுவிதா (24) என்பவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தற்போது சுவிதா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை பூவலை கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த சுவிதா, வேட்டியால் தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுவிதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் சுவிதாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X