என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுக்கடை பஸ்நிறுத்தம் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்- பயணிகள் அவதி
Byமாலை மலர்16 Jan 2021 4:07 PM GMT (Updated: 16 Jan 2021 4:07 PM GMT)
கடந்த சில மாதங்களாக அவ்வவ்போது பெய்து வரும் மழையால் மேட்டுக்கடை பஸ்நிறுத்தம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
குண்டடம்:
கோவை-மதுரை மெயின் ரோட்டில் குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடை பஸ்நிறுத்தத்தில் அதிகளவில் பயணிகள் வந்து பஸ் ஏறி செல்லும் பஸ் நிறுத்தமாக உள்ளது. மேட்டுக்கடை மற்றும் அதன் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இங்கு வந்து பஸ் ஏறி தாராபுரம், கோவை, ஒட்டன்சத்திரம், மதுரை, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதனால் எந்த நேரமும் இந்த பஸ் நிறுத்தம் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும்.
கடந்த சில மாதங்களாக அவ்வவ்போது பெய்து வரும் மழையால் இந்த பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழைநீர் நிற்பதால் அதில் கொசுக்கள் உருவாகி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வாகனங்கள் மழைநீரை கடந்து செல்லும்போது பஸ்சுக்கு காத்திருப்போர் மீது தண்ணீர் தெறித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே பஸ் நிறுத்தத்தில் மண்ணை கொட்டி மழைநீர் தேங்காமல் செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X