என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளச்சல் அருகே அழுகிய நிலையில் ஓடையில் டிரைவர் பிணம்: எப்படி இறந்தார்? போலீசார் விசாரணை
Byமாலை மலர்16 Jan 2021 12:50 PM GMT (Updated: 16 Jan 2021 12:50 PM GMT)
குளச்சல் அருகே அழுகிய நிலையில் ஓடையில் டிைரவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே பாலபள்ளம் சரணங்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் விக்டர்ராஜ் (வயது 30). இன்னும் திருமணமாகவில்லை. வெளி மாவட்டங்களுக்கு மீன் ஏற்றி செல்லும் டெம்போவில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
கடந்த 11-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியில் உள்ள ஓடையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குளச்சல் போலீசார் உதவியுடன் அங்கு சென்று பார்த்தனர். ஓடையில் பிணமாக கிடந்தது விக்டர் ராஜ் என்பது தெரிய வந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விக்டர் ராஜ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த குளச்சல் போலீசார் விக்டர் ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், மது குடித்து விட்டு ஓடையில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X