search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

    புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கடை:

    புதுக்கடை அருகே முன்சிறை பெருகிலாவிளையை சேர்ந்த தொழிலாளி சிசில்ராஜ் (வயது 55). இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிசில்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிசில்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×