என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலனூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி
Byமாலை மலர்16 Jan 2021 11:29 AM GMT (Updated: 16 Jan 2021 11:29 AM GMT)
மூலனூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலனூர்:
மூலனூர் அருகே உள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் கணேசன். இவர் அந்த ஊரில் உணவகம் நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி சித்ரா இவர் தனது உணவகத்துக்கு தேவையான மாவை வீட்டில் உள்ள கிரைண்டரில் தயார் செய்வார். அதன்படி பொங்கலன்று உணவகத்துக்கு தேவையான மாவை கிரைண்டரில் அரைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சித்ரா மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதை பார்த்து அவருடைய கணவர் கணேசன் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சித்ராவை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மாவு அரைத்து கொண்டிருக்கும்போது மின்சாரம் பாய்ந்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X