search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருக்காட்டுப்பள்ளி அருகே மதுவிற்ற பெண் உள்பட 4 பேர் கைது

    திருக்காட்டுப்பள்ளி அருகே மதுவிற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பாலு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூதலூர் மேம்பாலத்தின் அருகே வேகமாக வந்த ஆம்னி காரை மறித்து சோதனையிட்டனர். அதில் மதுவிற்பனைக்காக 60 மதுபாட்டில் ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் ஆம்னி காரில் வந்த பூதலூர் அய்யனாபுரம் சாலை பகுதியை சேர்ந்த ராபர்ட் (வயது30) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர். இதேபோல் மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக 40 மதுபாட்டில்களை கொண்டு வந்த திருச்சி ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40), திருக்காட்டுப்பள்ளி லயன்கரையை சேர்ந்த ரமேஷ் (21) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 18 மதுபாட்டில்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பூதலூர்அருகே உள்ள மாரனேரி புது காலனி பகுதியில் மது விற்ற புஷ்பம் (72) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×