என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்16 Jan 2021 10:42 AM GMT (Updated: 16 Jan 2021 10:42 AM GMT)
ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த பனவெளி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாசாமி(வயது65). விவசாய கூலிதொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள வெட்டாற்றில் குளிப்பதற்காக சென்றார். ஆற்றில் மழை தண்ணீர் அதிகஅளவு சென்று கொண்டிருந்தது. திடீரென தண்ணீரில் அப்பாசாமி இழுத்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன்னை காப்பாற்றும்படி சத்தம்போட்டார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அப்பாசாமியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரில் மூழ்கிய அப்பாசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர், மூழ்கிய இடத்தில் இருந்து 200 அடி தொலைவில் ஆற்றில் வளர்ந்து கிடக்கும் நாணலில் சிக்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அப்பாசாமி உடல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X