search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,448 ஆக உயர்ந்தது.
    நாமக்கல்:

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 11,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. அதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,448 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 21 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

    இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 110 பேர் பலியாகி இருந்த நிலையில், மாவட்டத்தில் 11, 207 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 131 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×