என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பந்தட்டை அருகே தம்பி இறந்த துக்கத்தில் அக்காள் பலி
Byமாலை மலர்16 Jan 2021 9:55 AM GMT (Updated: 16 Jan 2021 9:55 AM GMT)
வேப்பந்தட்டை அருகே தம்பி இறந்த துக்கத்தில் அக்காள் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூரை சேர்ந்தவர் பெரியசாமியின் மனைவி பெரியம்மாள்(வயது 37). இவரது தம்பி செல்லமுத்து(30). இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருவாலந்துறையில் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
அவருக்கு 90-வது நாள் துக்க நிகழ்ச்சி திருவாலந்துறையில் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. தம்பி இறந்த துக்கத்தில் இருந்த பெரியம்மாள், செல்லமுத்துவின் புகைப்படத்தை பார்த்து அழுதார்.
அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X