search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரம்பலூர் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

    பெரம்பலூர் அருகே புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் போலீஸ் சரகம் கவுல்பாளையம் ஊராட்சி மேற்குமலை அடிவாரத்தில் வசித்து வருபவர் கோவிந்தன். இவருக்கு சிவா(வயது 29), சிவமூர்த்தி (24) என மகன்கள். சிவா கல் உடைக்கும் ஆலையில் டோசர் எந்திரம் இயக்கும் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிவாவிற்கு கூத்தூரை சேர்ந்த சின்னையனின் மகள் சத்யாவை திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவா, மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அவரை சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்குள் படுக்குமாறு கூறிவிட்டு கோவிந்தன் உள்ளிட்ட அனைவரும் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிவிட்டனர்.

    நேற்று காலை அவர்கள் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவா தூக்கில் பிணமாக தொங்கினாா். இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×