search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரம்பலூர் அருகே மொபட் மீது கார் மோதல் - பள்ளி சமையல்காரர் பலி

    பெரம்பலூர் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி சமையல்காரர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் அரியலூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விழுப்புரம் வாணியர் தெருவைச்சேர்ந்த ரெங்கராஜ்(வயது 62) என்பவர் பள்ளியிலேேய தங்கி சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவா் நேற்று மதியம் மொபட்டில் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றபோது தஞ்சை நோக்கி வேகமாக சென்ற கார் மொபட் மீது மோதியது. 

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ரெங்கராஜின் உறவினர் சுந்தர் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். 

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா வலுந்தூரைச்சேர்ந்த கார் டிைரவர் சையது முகமது இஸ்மாயிலை (49) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×