என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரூ.14½ கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்16 Jan 2021 8:47 AM GMT (Updated: 16 Jan 2021 8:47 AM GMT)
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரூ.14½ கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.3¼ கோடி கூடுதலாகும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் 120 அரசு டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 டாஸ்மாக் கடைகளும் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 222 டாஸ்மாக் கடைகளும் மற்றும் 9 அரசு மதுபான கூடங்களும் உள்ளன. இந்த கடைகளில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். விழுப்புரம் மாவட்டத்தின் அருகிலேயே புதுச்சேரி மாநிலம் இருப்பதாலும் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை போன்றவற்றை தாண்டியும் விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. தீபாவளி பண்டிகை, புத்தாண்டு, பொங்கல் விழா போன்ற பண்டிகை நாட்களில் வழக்கத்தைவிட மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் பொங்கல் விழாவையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.14 கோடியே 45 லட்சத்து 41 ஆயிரத்து 950-க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான கடந்த 13-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 7, 400 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 3,608 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.5 கோடியே 49 லட்சத்து 46 ஆயிரத்து 50-க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது.
இதேபோல் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட வகைகள் 11,906 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 5, 995 அட்டைப்பெட்டிகளும் விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் ரூ.8 கோடியே 95 லட்சத்து 95 ஆயிரத்து 900-க்கு மது வகைகள் விற்பனையானது.
கடந்த 2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14-ந்தேதி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 7,088 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 4,018 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.4 கோடியே 45 லட்சத்து 9 ஆயிரத்து 65-க்கும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 10,104 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 10, 687 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்ததன் மூலம் ரூ.6 கோடியே 80 லட்சத்துக்கும் என மொத்தம் 2 நாட்களில் ரூ.11 கோடியே 25 லட்சத்து 9 ஆயிரத்து 65-க்கு மது வகைகள் விற்பனையானது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் மது வகைகள் விற்பனையான தொகையை விட இந்த ஆண்டு 2 நாட்களில் மதுபானங்களின் விற்பனை தொகை ரூ.3 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரத்து 885 அளவிற்கு கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் 120 அரசு டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 டாஸ்மாக் கடைகளும் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 222 டாஸ்மாக் கடைகளும் மற்றும் 9 அரசு மதுபான கூடங்களும் உள்ளன. இந்த கடைகளில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். விழுப்புரம் மாவட்டத்தின் அருகிலேயே புதுச்சேரி மாநிலம் இருப்பதாலும் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை போன்றவற்றை தாண்டியும் விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. தீபாவளி பண்டிகை, புத்தாண்டு, பொங்கல் விழா போன்ற பண்டிகை நாட்களில் வழக்கத்தைவிட மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் பொங்கல் விழாவையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.14 கோடியே 45 லட்சத்து 41 ஆயிரத்து 950-க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான கடந்த 13-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 7, 400 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 3,608 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.5 கோடியே 49 லட்சத்து 46 ஆயிரத்து 50-க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது.
இதேபோல் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட வகைகள் 11,906 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 5, 995 அட்டைப்பெட்டிகளும் விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் ரூ.8 கோடியே 95 லட்சத்து 95 ஆயிரத்து 900-க்கு மது வகைகள் விற்பனையானது.
கடந்த 2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14-ந்தேதி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 7,088 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 4,018 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.4 கோடியே 45 லட்சத்து 9 ஆயிரத்து 65-க்கும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 10,104 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 10, 687 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்ததன் மூலம் ரூ.6 கோடியே 80 லட்சத்துக்கும் என மொத்தம் 2 நாட்களில் ரூ.11 கோடியே 25 லட்சத்து 9 ஆயிரத்து 65-க்கு மது வகைகள் விற்பனையானது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் மது வகைகள் விற்பனையான தொகையை விட இந்த ஆண்டு 2 நாட்களில் மதுபானங்களின் விற்பனை தொகை ரூ.3 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரத்து 885 அளவிற்கு கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X