என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க.-பா.ம.க. 20-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
Byமாலை மலர்16 Jan 2021 6:21 AM GMT (Updated: 16 Jan 2021 6:21 AM GMT)
வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசி கூட்டணியை உறுதிப்படுத்த அ.தி.மு.க. விரும்புகிறது.
ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து பா.ம.க. போராடி வருகிறது. எனவே அந்த கோரிக்கைக்கு தீர்வு கிடைத்த பிறகு தான் கூட்டணி பற்றி பேச முடியும் என்பதில் பா.ம.க. தீர்க்கமாக உள்ளது.
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கடந்த வாரம் தைலாபுரம் சென்று டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள்.
அந்த சந்திப்பின் போதும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை விபரங்கள் எதையும் அ.தி.மு.க. தரப்பில் வெளியிடவில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதவில் ‘அமைச்சர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக பேசினார்கள்.
கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. மீண்டும் பொங்கலுக்கு பிறகு சந்திப்பதாக கூறி சென்றார்கள். இட ஒதுக்கீடு பிரச்சனை தீர்வு கிடைத்த பிறகே கூட்டணி தொடர்பாக பேசப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி மீண்டும் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) அமைச்சர்கள் குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது உடன்பாடு ஏற்படும் என்று பா.ம.க. தரப்பில் தெரிவித்தனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசி கூட்டணியை உறுதிப்படுத்த அ.தி.மு.க. விரும்புகிறது.
ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து பா.ம.க. போராடி வருகிறது. எனவே அந்த கோரிக்கைக்கு தீர்வு கிடைத்த பிறகு தான் கூட்டணி பற்றி பேச முடியும் என்பதில் பா.ம.க. தீர்க்கமாக உள்ளது.
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கடந்த வாரம் தைலாபுரம் சென்று டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள்.
அந்த சந்திப்பின் போதும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை விபரங்கள் எதையும் அ.தி.மு.க. தரப்பில் வெளியிடவில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதவில் ‘அமைச்சர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக பேசினார்கள்.
கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. மீண்டும் பொங்கலுக்கு பிறகு சந்திப்பதாக கூறி சென்றார்கள். இட ஒதுக்கீடு பிரச்சனை தீர்வு கிடைத்த பிறகே கூட்டணி தொடர்பாக பேசப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி மீண்டும் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) அமைச்சர்கள் குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது உடன்பாடு ஏற்படும் என்று பா.ம.க. தரப்பில் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X