என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: தம்பதி உள்பட 3 பேர் பலி
Byமாலை மலர்16 Jan 2021 2:41 AM GMT (Updated: 16 Jan 2021 2:41 AM GMT)
மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தேனி:
தேனி மாவட்டம், அன்னை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் விஸ்வநாதன் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வினோத் (20). இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் வெல்டர் வேலைபார்த்து வந்தனர்.
கடந்த 13-ந்தேதி இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வழியாக தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். வினோத் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். விஸ்வநாதன் பின்னால் அமர்ந்து வந்தார்.
அரவக்குறிச்சி தெத்துப்பட்டியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி செல்லமுத்து (50), இவரது மனைவி லதா (35). இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அரவக்குறிச்சி தெத்துப்பட்டி இந்திராநகர் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வினோத், மாற்றுத்திறனாளி செல்லமுத்து, லதா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாற்றுத்திறனாளி செல்லமுத்து இறந்தார். அவரது மனைவி லதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.
பின்னர் வினோத் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து செல்லமுத்து அவரது மனைவி லதா ஆகியோரது உடல்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், விஸ்வநாதன் உடல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், அன்னை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் விஸ்வநாதன் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வினோத் (20). இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் வெல்டர் வேலைபார்த்து வந்தனர்.
கடந்த 13-ந்தேதி இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வழியாக தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். வினோத் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். விஸ்வநாதன் பின்னால் அமர்ந்து வந்தார்.
அரவக்குறிச்சி தெத்துப்பட்டியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி செல்லமுத்து (50), இவரது மனைவி லதா (35). இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அரவக்குறிச்சி தெத்துப்பட்டி இந்திராநகர் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வினோத், மாற்றுத்திறனாளி செல்லமுத்து, லதா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாற்றுத்திறனாளி செல்லமுத்து இறந்தார். அவரது மனைவி லதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.
பின்னர் வினோத் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து செல்லமுத்து அவரது மனைவி லதா ஆகியோரது உடல்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், விஸ்வநாதன் உடல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X