என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலையில் கல்லை போட்டு மகன் கொலை- தந்தை கைது
Byமாலை மலர்16 Jan 2021 1:10 AM GMT (Updated: 16 Jan 2021 1:10 AM GMT)
மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
நாகமலைபுதுக்கோட்டை:
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள வடிவேல்கரை மேற்கு தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் கதிரவன் (வயது 29). இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் திருமணம் செய்து வைக்கக்கோரி கதிரவன் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு பெற்றோர்களிடம் சண்டையிட்டு தொந்தரவு செய்து வந்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த சாமிநாதன் சம்பவத்தன்று இரவு வடிவேல்கரை நாடக மேடையில் தூங்கிக்கொண்டிருந்த கதிரவன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயம் அடைந்த கதிரவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.
இதுகுறித்து சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் சாமிநாதனை கைது செய்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கதிரவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X