என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி
Byமாலை மலர்15 Jan 2021 5:24 AM GMT (Updated: 15 Jan 2021 5:24 AM GMT)
வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த தூதகுடி மங்களத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 21). அவருடைய நண்பர் பாலமுருகன் (26). இவர்கள் 2 பேரும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் காளையார் கோவில் நோக்கி சென்றபோது கொடைரோடு அருகே மாவூர் அணை பிரிவில் அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பாலமுருகனுக்கு அம்மையநாயக்கனூர் அரசு சமுதாய நல மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் செம்பட்டியை அடுத்த புதுகாமன்பட்டியை சேர்ந்த ரமேஷ் (29) என்பவர் மதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடைரோடு தளிபாலம் அருகே லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரமேஷ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துகள் குறித்து கொடைரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X