search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

    அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தவர் பன்னீர்செல்வம் (வயது 35). இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பழவேற்காடு தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டில் தனியாக இருந்த பன்னீர்செல்வம், மின்விசிறியில் திடீரென கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×