search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்  வெற்றி பெற்ற இளைஞர்
    X
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற இளைஞர்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளில் தலா 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

    வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சில காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடின. 

    வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளின் திமிலை வீரர்கள் இறுகப் பற்றிக் கொண்டு காளை மூன்று சுற்றுகள் சுற்றும்வரை பிடித்திருக்க வேண்டும் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அந்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. 

    வீரர்கள் யாரையும் தன் அருகே வரவிடாமல், திமிலை பிடிக்க அனுமதிக்காமல் செல்லும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    இன்றைய ஜல்லிக்கட்டு போட்டிக்கு 788 காளைகள் பதிவு செய்யப்பட்டன. 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 8 சுற்றுகளாக இன்று மாலை வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 520 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருநாவுக்கரவு, விஜய் ஆகிய இரு இளைஞர்கள் தலா 26 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றனர்.

    G.R. கார்த்திக் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.
    Next Story
    ×