என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
Byமாலை மலர்13 Jan 2021 6:11 PM GMT (Updated: 13 Jan 2021 6:11 PM GMT)
விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8¾ பவுன் நகைகளை மீட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளின் கதவை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு, வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், ஏட்டு மணிமாறன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பம் ரேடியோ ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அன்புராஜ் (வயது 49) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் நகரம், வளவனூர், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் ஆகிய போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அன்புராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 8¾ பவுன் நகைகளை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாகும்.
விழுப்புரம் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளின் கதவை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு, வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், ஏட்டு மணிமாறன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பம் ரேடியோ ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அன்புராஜ் (வயது 49) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் நகரம், வளவனூர், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் ஆகிய போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அன்புராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 8¾ பவுன் நகைகளை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X