என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
Byமாலை மலர்13 Jan 2021 7:51 AM GMT (Updated: 13 Jan 2021 7:51 AM GMT)
திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கிஷோர்பாண்டி (வயது 25). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர்பாண்டியின் பெற்றோர் சென்னைக்கு சென்று விட்டனர். இதனால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிஷோர்பாண்டி வீட்டுமுன்பு தடுமாறி விழுந்துள்ளார். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. மேலும் வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கிஷோர்பாண்டி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருடைய பெற்றோருக்கு வந்தபின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர். மேலும் இதுதொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X