என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்13 Jan 2021 12:58 AM GMT (Updated: 13 Jan 2021 12:58 AM GMT)
கும்பகோணம் அருகே 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், ஒரே கிராமத்தை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தது.. இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகை ஊராட்சி கொட்டியப்படுகை கிராமத்தை சேர்ந்த 40 வயது நிரம்பிய நபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ததில் அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
நேற்று முன்தினம் வரை 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தது.. இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகை ஊராட்சி கொட்டியப்படுகை கிராமத்தை சேர்ந்த 40 வயது நிரம்பிய நபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ததில் அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
நேற்று முன்தினம் வரை 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X