என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் பலத்த மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது
Byமாலை மலர்12 Jan 2021 2:23 PM GMT (Updated: 12 Jan 2021 2:23 PM GMT)
தூத்துக்குடியில் நேற்று பெய்த மழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் காலை முதல் நேற்று வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே, திருச்செந்தூர் ரோடு, தபால் தந்தி காலனி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, குரூஸ் பர்னாந்து சிலை பகுதி, டபிள்யூ.ஜி.சி. ரோடு, டூவிபுரம் மெயின்ரோடு அண்ணாநகர் 1-வது தெரு, அரசு ஊழியர் குடியிருப்பு, போல்டன்புரம், ராமசாமியாபுரம், முதன்மைக்கல்வி அலுவலகம், தாலுகா அலுவலகம் பகுதி, அந்தோணியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஜார்ஜ் ரோடு, மறக்குடி தெரு, முத்தையாபுரம், சூசைநகர், அத்திமரப்பட்டி, பிரையன்ட் நகர் 3, 4 மற்றும் 5-வது தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால்100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை(மி.மீல்) திருச்செந்தூர் 22, காயல்பட்டினம் 31, குலசேகரன்பட்டினம் 30, விளாத்திகுளம் 2, காடல்குடி 4, வைப்பாறு 19, சூரங்குடி 37, கோவில்பட்டி 1, ஓட்டப்பிடராம் 24, மணியாச்சி 5, வேடநத்தம் 47, கீழஅரசடி 21, எட்டயபுரம் 1, சாத்தான்குளம் 16.6, ஸ்ரீவைகுண்டம் 29, தூத்துக்குடி 35 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கி போட்டு உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை காலமாக உள்ள நிலையில் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ள கரும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த மழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X