search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செல்போன் கோபுரத்தில் தாமிர கம்பியை திருட முயன்ற 3 பேர் கைது

    விழுப்புரம் அருகே செல்போன் கோபுரத்தில் தாமிர கம்பியை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் செல்போன் நிறுவன கோபுரத்தில் தாமிர கம்பியை திருட முயன்ற 3 பேர், அங்கிருந்து தப்பியோடினர். 

    உடனே பொதுமக்கள் உதவியுடன் அந்த 3 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சங்கர் (வயது 27) , விழுப்புரம் சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனி (47) , குமரேசன் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×