search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செஞ்சி அருகே முதலையை கொன்ற வாலிபர் கைது

    செஞ்சி அருகே முதலையை கொன்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே செவலபுரை வராக நதி அணைக்கட்டு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வராக நதியில் முதலைகள் உலா வந்தது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாம6ல் இருக்க அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வராக நதி கரையோரம் முதலை ஒன்று ரத்த காயங்களுடன் செத்து கிடந்தது. 

    இது குறித்து செஞ்சி வனச்சரகர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முதலையை கொன்றது செவலபுரை கிராமத்தை சேர்ந்த சர்தார் மகன் சவுக்கத்அலி (வயது 25) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    Next Story
    ×