என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 49 பவுன் நகைகள் திருட்டு
Byமாலை மலர்12 Jan 2021 1:37 PM GMT (Updated: 12 Jan 2021 1:37 PM GMT)
கோவை அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 49 பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவையை அடுத்த சூலூர் பேரூராட்சி அன்னை சகாயமாதா தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 49). இவர், சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப்பின் உறவினர் ஒருவர் வடவள்ளியில் இறந்துவிட்டார். அது குறித்து விசாரிப்பதற்காக ஜோசப் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சென்றனர். நேற்று காலை அவர் வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 49 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X