search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பூதலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி விவசாயியிடம் பணம் பறித்தவர் கைது

    பூதலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி விவசாயியிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் அருகே உள்ள வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். விவசாயியான இவர் இந்தளூர் புது ஆற்றுபாலத்தின் அருகே நடந்து சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் கத்தியை காட்டி வசந்தகுமாரை மிரட்டிஅவரிடம் இருந்த ரூ.100-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற வேப்பங்குடியை சேர்ந்த முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×