என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு
Byமாலை மலர்12 Jan 2021 1:45 AM GMT (Updated: 12 Jan 2021 1:45 AM GMT)
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் விஷம் குடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்பு செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திசையன்விளையில் தாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இடத்தை சிலர் தங்களுடைய நிலம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இசக்கியம்மாள் (வயது 50) என்ற பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இசக்கியம்மாளை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்பு செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திசையன்விளையில் தாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இடத்தை சிலர் தங்களுடைய நிலம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இசக்கியம்மாள் (வயது 50) என்ற பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இசக்கியம்மாளை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X