search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேபி நட்டா
    X
    ஜேபி நட்டா

    மதுரவாயலில் 14-ந்தேதி நம்மஊரு பொங்கல் விழாவில் ஜேபி நட்டா பங்கேற்கிறார்- பா.ஜனதா ஏற்பாடு

    மதுரவாயலில் பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்துள்ள நம்ம ஊரு பொங்கல் விழாவில் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள இருப்பதாக எல் முருகன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

    இதில் திரை நட்சத்திரங்களான குஷ்பு, காயத்ரி ரகுராம், கவுதமி, நமீதா, கங்கை அமரன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று வருகிறார்கள்.

    ஒவ்வொரு ஊர்களிலும் பாரம்பரியமாக பொங்கல் விழாக்களை எப்படி கொண்டாடுவார்களோ அதேபோல் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, கிராமங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவற்றை செய்து வருகிறார்கள்.

    பா.ஜனதா ஏற்பாடு செய்தாலும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இன்று நாகர்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் கலந்து கொள்கிறார்.

    அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 14-ந்தேதி பொங்கல் தினத்தில் சென்னை வருகிறார். அன்று சென்னையில் நடைபெறும் ‘துக்ளக்’ பத்திரிகை விழாவில் கலந்து கொள்கிறார்.

    முன்னதாக மதுரவாயலில் பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்துள்ள நம்ம ஊரு பொங்கல் விழாவிலும் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள இருப்பதாக முருகன் கூறினார்.

    மதுரையில் பா.ஜனதா அலுவலகத்தை தேச விரோதிகள் திட்டமிட்டு சூறையாடி இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் விரைவில் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய வேண்டும்.

    முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தேச விரோத செயல்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். எனவே போலீசார் விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

    Next Story
    ×