search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ராமநாதபுரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் பலி

    ராமநாதபுரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் சண்முகராஜ் (வயது 22). மேள கலைஞர்.

    சில மாதங்களுக்கு முன் திருமணமான இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இவரது தந்தை கோவிலுக்கு யாத்திரை சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மனைவி மற்றும் மைத்துனர் மூர்த்தியுடன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மழையால் வீட்டின் மண் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

    தூங்கிக் கொண்டிருந்த சண்முகராஜ் மற்றும் அவரது மைத்துனர் மூர்த்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

    சத்தம் கேட்டு அருகில் குடியிருந்தவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். இதில் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது.

    மைத்துனர் மூர்த்தியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சண்முகராஜ் மனைவி சற்று தூரத்தில் படுத்திருந்ததால் உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×