search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணம்மாள்
    X
    கிருஷ்ணம்மாள்

    தா.பேட்டை அருகே தாயை இரும்பு குழாயால் தாக்கிய மகன் கைது

    தா.பேட்டை அருகே தாயை இரும்பு குழாயால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அருகே மாவலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (வயது 52). இவரது மகன் அருள்செல்வம் (37). கட்டிட கூலிவேலைக்கு சென்று வந்த இவர், தற்போது வேலை கிடைக்காததால் அதே பகுதியில் ஆடு மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடு மேய்க்கும் போது கிருஷ்ணம்மாள், அருள் செல்வம் ஆகியோர் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. 

    அப்போது, அருள்செல்வம் தாய் கிருஷ்ணம்மாளின் தலையில் இரும்பு குழாயால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து அருள்செல்வத்தை கைதுசெய்தனர்.

    Next Story
    ×