என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
Byமாலை மலர்10 Jan 2021 9:30 AM GMT (Updated: 10 Jan 2021 9:30 AM GMT)
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் சிற்றரசு(வயது 50). இவருக்கு அந்த பகுதியில் ஒரு ஓட்டு வீடும், கூரை வீடும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் ஓட்டு வீட்டை பூட்டிவிட்டு, கூரை வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது ஓட்டு வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சிற்றரசு கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள மணிகண்டன் (37) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டையும், மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் சிற்றரசு(வயது 50). இவருக்கு அந்த பகுதியில் ஒரு ஓட்டு வீடும், கூரை வீடும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் ஓட்டு வீட்டை பூட்டிவிட்டு, கூரை வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது ஓட்டு வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சிற்றரசு கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள மணிகண்டன் (37) என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டையும், மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X