search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி விஷம் தின்று தற்கொலை

    கொரோனா ஊரடங்கால் சரியாக வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 46). கூலித்தொழிலாளியான இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது.

    கொரோனா ஊரடங்கினால் சரியாக வேலை எதுவும் கிடைக்காத விரக்தியில் இருந்த தங்கவேல் கடந்த 7-ந்தேதி இரவு எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் தங்கவேலை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கவேல் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×