search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிப்பு
    X
    பணம் பறிப்பு

    ஆட்டோ டிரைவரை வெட்டி பணம் பறித்த 3 பேருக்கு வலைவீச்சு

    ஆட்டோ டிரைவரை வெட்டி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு வீரபாண்டி தெருவைச் சேர்ந்தவர் சதா (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செங்குன்றம் தண்டல்கழனி அருகே வந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை மடக்கி கத்தியால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.7500-ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சதாவை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவரை வெட்டி பணம் பறித்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×