என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார்
Byமாலை மலர்9 Jan 2021 6:05 PM GMT (Updated: 9 Jan 2021 6:05 PM GMT)
ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும் என மொத்தம் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களிலும் தலா ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும் என மொத்தம் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,651 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 4,567 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 340 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 237 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களிலும் தலா ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும் என மொத்தம் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,651 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 4,567 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 340 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 237 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X