search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்துபோன ஆடுகள்.
    X
    இறந்துபோன ஆடுகள்.

    வையம்பட்டி அருகே மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி- பெண் மயக்கம்

    வையம்பட்டி அருகே நேற்று மாலை மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் 4 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. மயக்கம் அடைந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    வையம்பட்டி:

    வையம்பட்டி அருகே உள்ள சாமியார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 50). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வெள்ளையம்மாள் மயக்கம் அடைந்தார். மேலும், மின்னல் தாக்கியதில் 4 ஆடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. 

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மயங்கி கிடந்த வெள்ளையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×