search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மேல்மலையனூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    மேல்மலையனூர் அருகே மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    மேல்மலையனூர்:

    மேல்மலையனூர் அருகே உள்ள மரக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவருடைய மகன் பிரேம்குமார்(வயது 7). இவன், அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பிரேம்குமார், மதியழகன் என்பவரின் வீட்டு மாடியில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது மாடியின் மேல் பகுதியில் இருந்த மின்கம்பியை பிரேம்குமார் தொட்டான். இதில் மின்சாரம் தாக்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே பலியானான். 

    இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×