என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை- போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
Byமாலை மலர்8 Jan 2021 11:11 PM GMT (Updated: 8 Jan 2021 11:11 PM GMT)
இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததாக போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
புளியங்குடி:
கோவை மாவட்டத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் பிரேம்குமார் (வயது 34). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் டிரைவராக உள்ளார். இவருக்கு செல்வம் (32) என்ற மனைவியும், 9 வயதில் மகளும் உள்ளனர்.
செல்வத்தின் பெற்றோர் புளியங்குடி அருகே மேட்டுபச்சேரி என்ற ஊரில் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பிரேம்குமார் குடும்பத்தினர் கடந்த ஆண்டு நவம்பரில் புளியங்குடி வந்தனர். அப்போது செல்வத்தின் உறவினரான 17 வயது பெண்ணை ஆசைவார்த்தை கூறி பிரேம்குமார் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, வாசுதேவநல்லூரில் வீட்டில் பதுங்கி இருந்த பிரேம்குமாரை கைது செய்தனர். கடத்தப்பட்ட இளம்பெண்ணும் மீட்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X