search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசந்தகுமார்
    X
    வசந்தகுமார்

    ரூ.6 லட்சம் வங்கி கடனை திருப்பிக்கேட்டு நெருக்கடி- தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

    வங்கிகளில் வாங்கிய ரூ.6 லட்சம் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    திரு.வி.க. நகர்:

    சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் முதல் சர்குலர் சாலையில் வசித்து வந்தவர் வசந்தகுமார்( வயது 59). இவருடைய மனைவி சுவேதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகனுக்கும் திருமணம் ஆகிவிட்டது. வசந்தகுமார் தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வசந்தகுமார், 3 வங்கிகளில் ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இருந்ததால் வசந்தகுமார், வங்கி கடனுக்கான தவணையை சரியாக கட்டவில்லை என தெரிகிறது.

    இதனால் கடனை திரும்ப செலுத்தகோரி வசந்தகுமாருக்கு வங்கிகளால் நியமிக்கப்பட்ட ஏஜெண்டுகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த வசந்தகுமார், நேற்று அதிகாலை வீட்டின் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×