search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பொள்ளாச்சி அருகே மண்எண்ணை விளக்கை பற்ற வைத்த போது உடல் கருகி மூதாட்டி பலி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மண்எண்ணை விளக்கை பற்ற வைத்த போது உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சாயாம்மாள் (வயது 85). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது திடீரென மின்சாரம் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்காக சாயம்மாள் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீ பிடித்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சாயம்மாளை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×